மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர ஜெர்மனி பயணம் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமுதாய ஒற்றுமையை குலைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இத்தகைய தாக்குதல்களுக்கு ஒரு திட்டமிட்ட வடிவம் இருப்பதாகவும், இவை ஜம்மு காஷ்மீர் மட்டும் அல்லாது நாட்டின் பிற பகுதிகளையும் குறிவைக்கும் வகையில் நடக்கின்றன என்றும் அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதலின் நோக்கம் மக்கள் மனதில் பயம் ஊட்டுவது, சுற்றுலா பொருளாதாரத்தை சிதைக்கும் மற்றும் மத அடிப்படையிலான குழப்பங்களை ஏற்படுத்துவதே என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் “அணு மிரட்டல்களுக்கு” முற்றிலும் தலைவணங்க போவதில்லை என்றும், பாகிஸ்தானை இருதரப்பு பேச்சுவழியே எதிர்கொள்ளும் நிலைப்பாடு இந்தியாவுக்கு தெளிவாக உள்ளது என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

மேலும் பேசும் போது, இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்தியா பதிலளித்த நேரங்களில், பயங்கரவாத தலைமையகங்களை நேரடியாக குறிவைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள், பக்கத்து நாட்டில் இருந்து செயல்படுவதாகவும், அந்த நாடு இவர்களை இந்தியாவை ஒழிப்பதற்கான கருவியாக பயன்படுத்துவதாகவும் கூறினார்.

"என் நாட்டையும், என் மக்களையும் காக்க எனக்கு உரிமை உள்ளது. ஜெர்மனி இந்த தாக்குதலைக் கண்டித்தது நல்ல விஷயம்," என்றார் ஜெய்சங்கர்.மேலும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஹான் வாடெஃபுல் கூறியதாவது: "ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடூரமானது. பொதுமக்கள் மீது நிகழ்ந்த இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். இருபுறமும் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவுக்கு பயங்கரவாதத்துக்கு எதிராக தன்னை பாதுகாக்கும் உரிமை முழுமையாக உள்ளது." என்று இந்தியாவுக்கு ஆதரவாக பேசினார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றாகிய ஜெர்மனியின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்துவிட்டதை அடுத்து அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி அடைந்ததாக கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *