சிறுவர்களிடையே இணைய அச்சுறுத்தலை கையாள்வதற்கான முன்னெடுப்பு!

- Muthu Kumar
- 31 Dec, 2024
கோலாலம்பூர், டிச.31-
சிறுவர்கள் எதிர்நோக்கும் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக. வரும் ஜனவரி முதலாம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கும் மலேசியாவின் சமூக ஊடக உரிமக் கொள்கை அமையவுள்ளது.இந்தக் கொள்கை, பாதுகாப்பான இலக்கவியல் சூழலை உருவாக்குவதோடு, சிறார் பாலியல் துன்புறுத்தல் அம்சங்கள்.சிஎஸ்.ஏ.எம் போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு சமூக ஊடகத் தளங்கள் பொறுப்பேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெயர் குறிப்பிடாத நபர்களுக்கு சமூக ஊடக சேவை மற்றும் அணுகலை வழங்குவதால், குற்றவாளிகள், குழந்தைகளை எளிதாக அணுகவோ அல்லது பாலியல் துன்புறுத்தல் அம்சங்கள் கொண்ட உள்ளடக்கத்தை பதிவு செய்யவோ வழிவகுக்கிறது.
இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை, அரச மலேசிய போலீஸ் படையின் இணையக் குற்றங்கள் மற்றும் கடத்தல் பிரிவின் புள்ளி விவரங்கள் காட்டுவதோடு, அதன் தொடர்பான கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான உடனடி தேவையையும் அது வலியுறுத்துகிறது.
ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் உரிமக் கட்டமைப்பு, பொறுப்புணர்வுக்கான ஒரு கருவி மட்டுமல்லாது, சிறுவர்கள் எதிர்நோக்கும் இணையக் குற்றங்களைக் கையாள்வதில் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கையும் ஆகும் என்று வட மலேசியப் பல்கலைக்கழகம், யு.யு. எம்-இன் பல்லூடக தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு பிரிவின் மூத்த விரிவுரையாளர், டாக்டர் அசியான் முஹமட் அட்ஸ்மி தெரிவித்தார்.
"உரிம கட்டமைப்பு. வலைத்தள அளவில் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. இலக்கவியல் கல்வியறிவு திறன்களைக் கொண்ட மக்களை மேம்படுத்துவது முக்கியமானது. மக்களின் இலக்கவியல் கல்வியறிவு குறித்து பேசும்போது, அதாவது பொது விழிப்புணர்வு பிரச்சாரம், கல்வி கழகங்களுடனான பங்காளித்துவம் மற்றும் மோசடிகளை அடையாளம் காண்பது பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துவது போன்றவை வலியுறுத்தப்பட வேண்டும்." என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *