ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை அஸாலினா மக்களவையில் தாக்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,டிச.12-

ஆன்லைன் பாதுகாப்பு மசோதா முதல் வாசிப்புக்காக நேற்றுமுன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா இணையத் தளத்தில் வெளியாகும் தீமையான தகவல்களுக்கு முடிவுகட்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

பிரதமர்துறை (சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் அதனைத் தாக்கல் செய்தார். தீமையான தகவல்கள் எனப்படுவது சிறார் பாலியல் வல்லுறவு, நிதிமோசடி, ஆபாச நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

இதனைத் தவிர்த்து, இதர ஒழுங்கீனமான செயல்கள், பயங்கரவாதம், அவமரியாதையான வார்த்தைப் பரிமாற்றம், குழந்தைத் துன்புறுத்தல் போன்றவையும் அதில் அடங்கும். இந்நோக்கத்திற்காக ஆன்லைன் பாதுகாப்புக்குழுவும் தீர்ப்பாயமொன்றும் அமைக்கப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *