ஆன்லைன் ஸ்கேம் - RM 2,16,000 இழந்த நியூஸிலாந்து பிரஜை!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, நவம்பர் 29: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி 61 வயதான நியூசிலாந்து பிரஜை 216,000 வெள்ளியை இழந்தார்.

பாதிக்கப்பட்டவர் வியாழக்கிழமை காவல்துறையில் புகார் அளித்ததாகவும், இந்த சம்பவம் இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியது என்றும் ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர்  Balveer Singh பகிர்ந்து கொண்டார்.

மைக்கேல் வோங் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர் கொடுத்த வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 25 வரை மொத்தம் 27 ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். SPB இன்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட்டின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு RM216,000 பரிமாற்றம் செய்ந்துள்ளார்.

இருப்பினும், வோங் கூடுதல் பணத்தைக் கோரியபோது, ​​பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்டார், மேலும் முதலீட்டிலிருந்து எந்த வருமானமும் பெறாததால் அவர் மோசடி செய்யப்பட்டதை விரைவில் உணர்ந்தார். இதனை அடுத்து அந்த நியூசிலாந்து பிரஜை போலீஸில் புகாரளித்தார்!

 

.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *