ஆன்லைன் ஸ்கேம் - RM 2,16,000 இழந்த நியூஸிலாந்து பிரஜை!

- Shan Siva
- 29 Nov, 2024
ஜொகூர் பாரு, நவம்பர் 29: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி 61 வயதான நியூசிலாந்து பிரஜை 216,000 வெள்ளியை இழந்தார்.
பாதிக்கப்பட்டவர்
வியாழக்கிழமை காவல்துறையில் புகார் அளித்ததாகவும், இந்த சம்பவம்
இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி
தொடங்கியது என்றும் ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் Balveer
Singh பகிர்ந்து கொண்டார்.
மைக்கேல் வோங்
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர் கொடுத்த வாக்குறுதிகளால்
ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்
அக்டோபர் 3 முதல் அக்டோபர் 25 வரை மொத்தம் 27 ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். SPB இன்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட்டின் கீழ்
பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு RM216,000 பரிமாற்றம் செய்ந்துள்ளார்.
இருப்பினும்,
வோங் கூடுதல் பணத்தைக் கோரியபோது, பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்டார், மேலும் முதலீட்டிலிருந்து எந்த வருமானமும்
பெறாததால் அவர் மோசடி செய்யப்பட்டதை விரைவில் உணர்ந்தார். இதனை அடுத்து அந்த நியூசிலாந்து
பிரஜை போலீஸில் புகாரளித்தார்!
.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *