ஆன்லைன் ஸ்கேம் - RM 252,150 இழந்த மாது!

top-news
FREE WEBSITE AD

 கோலா திரெங்கானு, டிச 31: இல்லாத டெண்டரை வழங்கிய சிண்டிகேட் மூலம் ஏமாற்றப்பட்ட ஒரு வர்த்தக பெண்மணி RM252,150  இழந்தார். 

பாதிக்கப்பட்ட 47 வயதான பெண்ணை டிசம்பர் 23 அன்று தொடர்பு கொண்ட சந்தேக நபர், மாநிலத்தில் உள்ள யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவின் கிளை வளாகத்திற்கு பட்டமளிப்பு அங்கிகள் மற்றும் சீருடைகளை வழங்கும் விற்பனையாளராக விரும்புகிறீர்களா என்று கேட்டதாகவும், பின்னர் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்பட்ட விலைக் குறிப்பைப் பார்த்த பிறகு டெண்டரை ஏற்க ஒப்புக்கொண்டதாகவும் கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்து, நிறுவனத்தின் மொத்த RM252,150 ஐப் பயன்படுத்தி பொருட்களை வாங்கியுள்ளார்  என்று அஸ்லி முகமட் நூர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர்,  பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சரிபார்த்து, பொருட்களுக்கான ஆர்டர்கள் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னரே தான் மோசடி செய்யப்பட்டதை  அப்பெண் உணர்ந்ததாக அஸ்லி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *