தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் பரபரப்பு – அண்ணாமலை இரு சக்கர வாகனத்தில் வருகை
- Surendran Sumdraraj
- 07 Apr, 2026
தொண்டாமுத்தூர், ஏப். 7-
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிகழ்வு பரபரப்பாக நடைபெற்றது.
அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிகழ்வில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இரு சக்கர வாகனத்தில் வந்து கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்தது. அவரின் எளிய வருகை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.
மற்றொரு பக்கம், தி.மு.க வேட்பாளர் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அலுவலக நுழைவாயிலில் திரண்டிருந்த கூட்டத்தில் சிக்கி சிரமத்தை சந்தித்தார். கூட்ட நெரிசலால் சில நேரம் தாமதமான அவர், பின்னர் உள்ளே சென்று தனது பையில் இருந்த வேட்புமனுவை தேடி, ஒருவழியாக தாக்கல் செய்தார்.
இந்த இரு சம்பவங்களும் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் சூழ்நிலையின் பரபரப்பையும் போட்டித் தன்மையையும் வெளிப்படுத்துகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த கட்ட பிரசாரங்கள் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



