BN உச்சமன்றக் கூட்டத்தில் ம.இ.கா இல்லை! விலகுகிறதா ம.இ.கா?!

top-news
FREE WEBSITE AD

கோத்த கினபாலு, ஜன 22: மஇகா கூட்டணியிலிருந்து விலகுவதாக வெளியான வதந்திகளை வெறும் ஊகம் என்று பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் நிராகரித்துள்ளார்.

மஇகா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பிஎன் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பெறவில்லை என்றும், கூட்டணியின் தலைமைக்கும் மஇகாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

மஇகா இன்னும் பாரிசான் நேஷனலுடன் இருப்பதாக தாம்  நம்புவதகவும்,  இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் கூறினார். எந்தக் கூட்டத்திலும் அது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இன்றுவரை, அவர்கள் வெளியேறுகிறார்கள் அல்லது தங்குகிறார்கள் என்று கூறும் நம்பகமான அறிக்கைகள் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், அத்தகைய பேச்சுக்களை நம்பகமான ஆதாரமாகக் கருதுவதில்லை என்றும் பாரிசான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கூட்டத்திற்கு பாரிசான் நேஷனல் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமை தாங்கினார். இதில் பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சபா (பிபிஆர்எஸ்) தலைவர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் மற்றும் ம.சீ.ச துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மஇகா பிரதிநிதிகள் இல்லாதது குறித்து கருத்து தெரிவித்த சாம்ப்ரி, அது ஒரு கால அட்டவணை  முரண்பாடு காரணமாக  ஏற்பட்டது என்று அவர் விளக்கினார்.
பிஎன் எப்போதும் நல்ல நம்பிக்கையைப் பேணுகிறது. வதந்திகள் பரவி இருக்கலாம், ஆனால் நாங்கள் அதை வெறும் ஊகமாகவே கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

கூட்டத்தின் போது, ​​மக்கள் முற்போக்குக் கட்சியை (PPP) கூட்டணியில் மீண்டும் சேர்க்க உச்ச மன்றம் முடிவு செய்ததாக சாம்ப்ரி மேலும் கூறினார்.
பிஎன் சபாவின் புதிய தலைவராக பிபிஆர்எஸ் தலைவர் ஆர்தரையும், துணைத் தலைவராக டத்தோஸ்ரீ ஜாஃப்ரி அரிஃபினையும், கட்சியின் மாநிலச் செயலாளராக டத்தோ முகமது ஹஸ்னோல் அயூப்பையும் கவுன்சில் நியமித்துள்ளதாக அவர் அறிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *