இதுவரை இல்லாத வெப்பம் இனி வரலாம்! அமைச்சு தகவல்
- Shan Siva
- 18 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன்18: எல் நினோ நிகழ்வு ஜூலை மாதம் தொடங்கி அடுத்த
ஆண்டின் முதல் பாதி வரை நீடிப்பதால், இந்த ஆண்டு மலேசியாவில் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்
ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்துள்ளார்.
பதிவு
செய்யப்பட்டதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டை நாம் சந்திக்க நேரிடும் என்றும்,
வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்
கூறினார்.
வரவிருக்கும் எல்
நினோ காரணமாக ஏற்படும் வெப்பமான வானிலையை எதிர்கொள்ள, திங்களன்று மத்திய மற்றும் மாநில முகமைகள் தங்கள்
முயற்சிகளை முடுக்கிவிட்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு
விவசாயத்தைப் பாதிக்கக்கூடும், அணைகளின் நீர்
மட்டத்தைக் குறைக்கக்கூடும், மேலும்
திறந்தவெளி எரிப்பு மற்றும் புகைமூட்டத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சு
தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



