நெகிரி செம்பிலான் புயலில் 100 வீடுகள் சேதம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 24: நேற்று மாலை 5 மணியளவில் வீசிய புயலில், நெகிரி செம்பிலான், மான்டின் பகுதியில் குறைந்தது 100 வீடுகள் சேதமடைந்தன.

பெரும்பாலான வீடுகளில் கூரைகள் சேதமுற்றுள்ளதாகவும், மேலும் 20 மரங்கள் வரைக்கும் சரிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சுற்றுப்புறங்களில் தாமன் ஸ்ரீ டாமர், தாமன் டேசா மன்டின், கம்போங் பாரு மன்டின், தாமன் அண்டலாஸ் மற்றும் பெக்கான் மன்டின் ஆகியவை அடங்கும் எனறு நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் தெரிவித்தார்.

இதில், தாமான் டேசா மன்டினில்  50 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *