முற்றிய போதை – ATM பகுதிக்குள் நுழைந்த வாகனம்!

- Shan Siva
- 29 Dec, 2024
கோத்தா கினாபாலு, டிச 29: இன்று அதிகாலை தாவாவ் ஜாலான் மஹ்காமாவில் உள்ள வங்கியின் ஏடிஎம் பகுதிக்குள் வாகனம் ஒன்று கண்ணாடியை உடைத்துகொண்டு புகுந்தது.
சம்பந்தப்பட்ட வாகனத்தின்
ஓட்டுநருக்கு போதை முற்றியதால் இச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு
ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் வங்கியினுள் நுழைந்தது
மட்டுமின்று ஐந்து வாகனங்களும் சேதமுற்றுள்ளதாக Tawau மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார்.
அதிகாலை 5.15
மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் வங்கியின் கதவு உடைந்து பல தானியங்கி பணம்
செலுத்தும் இயந்திரங்கள் சேதமடைந்தன.
25 வயதுடைய நபர்
நகரத்திலிருந்து தஞ்சோங் பத்துவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது
இந்த விபத்து நிகழ்ந்துள்ள வேளையில், ஓட்டுநர் எவ்வித
காயமும் இன்றி தப்பினார்.
இதனை அடுத்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 45A(1) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்
தடுத்து வைக்கப்பட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *