கோலாலம்பூர், ஜாலான் புடுவில் மரம் விழுந்து இருவர் காயம்! - சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 16: கோலாலம்பூர், ஜாலான் புடுவில் உள்ள சுவிஸ்-கார்டன் ஹோட்டல் புக்கிட் பிந்தாங் அருகே இன்று காலை மரம் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து காலை 10.44 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL உடன்  இணைந்து மரத்தை அகற்றும் பணி தொடங்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 39 மற்றும் 15 வயதுடைய அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மீட்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனால் ஜாலான் புடுவில் இரு திசைகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும், சாலைப் பயனர்கள் ஜாலான் ஹாங் துவாவிலிருந்து ஜாலான் டேவான் பஹாசா மற்றும் ஜாலான் மகாராஜா லீலா வரை நெரிசல் தொடர்வதாகவும் ஆஸ்ட்ரோ ரேடியோ போக்குவரத்து தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *