வெள்ளம் தொடர்பான போலி அழைப்புக்கு விசாரணைக் கோப்பு திறக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

பாசிர் மாஸ், டிச.9-

முதலாவது வெள்ளப் பேரிடர் குறித்து அண்மையில் குறிப்பிட்ட சிலர் செய்த போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணைக் கோப்பை போலீஸ் ஆரம்பிக்கும்.இதற்கு முக்கியக் காரணம் அண்மையில் பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் 114 போலித் தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டன என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

இச்சம்பவம் கிளாந்தானில் மட்டுமின்றி வெள்ளம் ஏற்பட்ட இதர மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது 1998 தொடர் மற்றும் பல்லூடகச் சட்டம், 233ஆவது பிரிவின் கீழ் போலீஸ் நடவடிக்கைமேற்கொள்ளும்.இப்பிரிவில் வெ.50,000 வரையிலான அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

அந்த வகையில் தற்போதைக்கு வெள்ளப் பிரச்சினையில் கவனம் செலுத்தப்படும். அதன் பிறகு போலித் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைக் கோப்பு திறக்கப்படும் என்று தேசிய போலீஸ் படையின் பாசிர் மாஸ் மாவட்ட வெள்ள நடவடிக்கைக் கட்டுப்பாட்டு இடுகைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *