புஸ்பாகோம் ஊழியரை அறைந்துள்ள வழக்கு விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், ஜன 17:


ஜொகூர் பாரு புஸ்பகோம் மையத்தில் லாரி சோதனை தோல்வியடைந்ததால், ஒரு நபர் புஸ்பகோம் ஊழியரை அறைந்ததை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த நவம்பரில் நடந்ததாகவும், ஆனால் சம்பவத்தின் காணொளி சமீபத்தில் வைரலாகி இருப்பதாகவும் ஜொகூர் பாரு வட பகுதி காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

நவம்பர் 18 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், 59 வயதான நபர் ஒருவர் தனது லாரி தொடர்பாக நடத்திய சோதனையில் தோல்வியடைந்ததால், பாதிக்கப்பட்ட 28 வயதான புஸ்பாகோம் ஊழியரை அறைந்துள்ளதாக அவர் கூறினார்.
தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *