ECER முதலீடுகள் 1330 கோடி – அன்வார் பெருமிதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 16: கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலமான ECER முதலீடுகள் 1330 கோடி ரிங்கிட்டைப் பதிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ECER ஆனது 1000 கோடியை இலக்காக நிர்ணயித்த நிலையில், 1330 கோடியைப் பதிவு செய்ய முடிந்ததாக அன்வார் பதிவிட்டுள்ளார்.

இந்த தொகையானது எஃகு உற்பத்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், பயோமாஸ் பொருட்கள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் 8,700 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட 21 திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

 2024 ஆம் ஆண்டின் கிழக்குக் கடற்கரைப் பொருளாதாரப் பகுதி மேம்பாட்டுக் கவுன்சில் (ECERDC) கூட்டத்தின் எண் 2 க்கு தாம் தலைமை தாங்கியபோது இதைத் தெரிவித்ததாக அன்வார் மேலும் கூறினார்.  மேலும் அரசாங்கம் அதன் வளர்ச்சிக் கட்டமைப்பை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நெறிப்படுத்துவதும் தொடரும் என்றும் அவர் நினைவூட்டினார்.

பிராந்தியங்களுக்கிடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதற்கும், கிழக்குக் கடற்கரைக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குமான முயற்சிகளை நனவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்ட முதலீடுகளை முறையாகக் கண்காணித்து செயல்படுத்துவதை, அதை எளிதாக்குவதன் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்தும் மடானி அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வெற்றி அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *