ECER முதலீடுகள் 1330 கோடி – அன்வார் பெருமிதம்!

- Shan Siva
- 16 Oct, 2024
கோலாலம்பூர், அக் 16: கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலமான ECER முதலீடுகள் 1330 கோடி ரிங்கிட்டைப் பதிவு
செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின்
முதல் மூன்று காலாண்டுகளில், ECER ஆனது 1000 கோடியை இலக்காக நிர்ணயித்த நிலையில், 1330 கோடியைப் பதிவு செய்ய
முடிந்ததாக அன்வார் பதிவிட்டுள்ளார்.
இந்த தொகையானது
எஃகு உற்பத்தி, பெட்ரோ
கெமிக்கல்ஸ், பயோமாஸ்
பொருட்கள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் 8,700 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட 21 திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அவர்
கூறினார்.
பிராந்தியங்களுக்கிடையிலான
வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதற்கும், கிழக்குக் கடற்கரைக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குமான முயற்சிகளை நனவாக்க
முடியும் என்று அவர் கூறினார்.
அறிவிக்கப்பட்ட
முதலீடுகளை முறையாகக் கண்காணித்து செயல்படுத்துவதை, அதை
எளிதாக்குவதன் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்தும் மடானி அரசாங்கத்தின்
விருப்பத்திற்கு ஏற்ப இந்த வெற்றி அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *