வெளிநாட்டுத் தொழிலாளர் EPF பங்களிப்பு விகிதம் 2 விழுக்காடு என அன்வார் அறிவிப்பு!

- Shan Siva
- 03 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 3: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஊழியர் வருங்கால
வைப்பு நிதியான (EPF) பங்களிப்பு
விகிதம் இரண்டு சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் அறிவித்தார்.
இன்று
அசோசியேட்டட் சீன வர்த்தக மற்றும் தொழில்துறை சபை சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில்
பேசிய அன்வார், இந்த விகிதம்
குறைவாக உள்ளது என்றும், முதலில்
முன்மொழியப்பட்ட 12 சதவீதத்திற்கு
மாறாக, முதலாளிகளுக்கு சுமையை
ஏற்படுத்தாது என்றும் அவர் விளக்கினார்.
ஆரம்பத் திட்டம் 12 விழுக்காடாக இருந்தது. ஆனால் அமைச்சரவை பல்வேறு காரணிகளைக் கணக்கில்
எடுத்துக்கொண்டது. இப்போதைக்கு அதை
இரண்டு சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளோம், நிலைமை மேம்பட்டவுடன் மறு மதிப்பீடு செய்வோம் என்று அன்வார்
கூறினார்.
அக்டோபரில் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, குடியுரிமை இல்லாத அனைத்து தொழிலாளர்களும் EPF-க்கு பங்களிப்பு செய்வதை கட்டாயமாக்க அரசாங்கம்
திட்டமிட்டுள்ளதாக அன்வார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *