அன்வார் ராஜினாமா செய்யத் தேவையில்லை!

- Shan Siva
- 07 Jan, 2025
பெட்டாலிங் ஜெயா:
நஜிப் ரசாக் தனது எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும்
கூடுதல் உத்தரவுக்காக, பிரதமர் அன்வார்
இப்ராஹிம் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பாசிர் கூடாங் எம்.பி. ஹசான் கரீம் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு
நீதிமன்றத்தின் தீர்ப்பு மலேசியாவில் அதிகாரப் பிரிப்புக் கொள்கை சிறப்பாகச்
செயல்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.
மேலும், அரசாங்கமோ அல்லது தாமோ நீதிமன்ற நடவடிக்கைகள்
மற்றும் நீதிபதிகளின் முடிவுகளில் தலையிட முடியாது என்று அன்வார் பலமுறை விளக்கியிருக்கிறார்.
அரச கட்டளையின்
இருப்பை மறுக்கவோ அல்லது சவால் செய்யவோ சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசி எந்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல்
செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விஷயத்தில்
ஏஜிசியின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பியதை ஹசான் சுட்டிக்காட்டினார்.
ஏஜிசியின் இந்த
தோல்வியை அன்வாரின் தோள்களில் சுமத்தக்கூடாது என்று ஹசான் கூறினார்.
எனவே, அன்வார் தவறு செய்யவில்லை. சில கட்சிகள்
கோரிக்கை விடுத்துள்ளதால், அவர் பிரதமர்
பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.
மாறாக, கூடுதல் உத்தரவு விஷயத்தில் நீதித்துறை
சுதந்திரத்தை மதிக்கும் அவரது நிலைப்பாடு மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாராட்டப்பட
வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக,
PAS தகவல் பிரிவுத் தலைவர்
அஹ்மத் ஃபத்லி ஷாரி, கூடுதல் ஆணையின்
இருப்பை மறைப்பது அரசாங்கத்தின் நேர்மையின்மையை பிரதிபலிப்பதாகவும், நியாயமான விசாரணை மற்றும் நீதிக்கான நஜிப்பின்
உரிமையை கடுமையாக மீறுவதாகவும் கூறி அன்வாரின் ராஜினாமாவைக் கோரியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *