ஊழல் எதிர்ப்பு பேரணிக்கு அன்வார் பச்சைக்கொடி!

top-news
FREE WEBSITE AD

டெங்கில், ஜன. 25 -

இன்று சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு பேரணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

எந்த ஒரு பிரச்சினையுமின்றி, கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள சோகோ பேரங்காடியில் தொடங்கி மெர்டேக்கா சதுக்கம் வரைக்குமான இப்பேரணி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அன்வார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

'ஹிம்புனான் ரக்யாட் பெஞ்சி ரசுவா' என்ற பெயரிலான பேரணிக்கான அங்கீகாரம் மீதான கவலை குறித்து கருத்துரைத்த அன்வார், இப்பேரணிக்கு அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்பேரணி நடத்தப்படுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சரும் (டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இவ்வாறே தெரிவித்திருக்கின்றார்.

"சில பகுதிகளில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், என்னைப் பொறுத்த வரையில் இதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. “லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுங்கள். பேரணி நடத்த வேண்டுமா. தாராளமாக நடத்துங்கள் என்று சிலாங்கூர். டெங்கிலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அன்வார் தெரிவித்தார்.

பிரதமர் எனும் முறையில் தமது இரண்டு ஆண்டுகால நிர்வாகத்தில் லஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் தமது நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அன்வார், தற்போது எழுப்பப்பட்டு வரும் லஞ்ச ஊழல் சம்பவங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்தவை என்றார்.

"ஆனால், கடந்த காலங்களில் காணாமல் போன கோடிக் கணக்கான பணம் பற்றி நாம் பேசினால், அப்போது அவற்றுக்கு எதிராக எந்த ஒரு கூக்குரலும் எழுப்பப்படவில்லை என்று, 1 எம்டிபி ஊழலை மேற்கோள்காட்டி அன்வார் குறிப்பிட்டார்.

"இதற்கும் மேலாக பலர். அத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களையும் தற்காத்துப் பேசி வருகின்றனர் என்று. நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *