உலக வணிக உயர்மட்டத் தலைவர்களுடன் அன்வார் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 22: சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று Google, Nestlé, AstraZeneca, Fortescue, DB World மற்Ruம்  Metronicsஆகிய நிறுவனங்களின் வணிகத் தலைவர்களுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்தினார்.

முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட சந்திப்புகள் என்று அன்வவார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியாவிற்குள் ஈடுபடுத்தவும் ஈர்க்கவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த சந்திப்புகள் இருந்தன என்று அவர் கூறினார்.

வணிக ஒத்துழைப்புக்கான பல்வேறு வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கவும் ஆராயவும் இது ஒரு நல்ல அமர்வாக இருந்தது, என்று அவர் தெரிவித்தார்.

2022 இல் பதவியேற்றதிலிருந்து உச்சிமாநாட்டில் அவர் முதன்முறையாக பங்கேற்கும் WEF-க்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் பயணத்தில் மலேசிய தூதுக்குழுவை அன்வார் தற்போது வழிநடத்துகிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *