அன்வாரின் விளக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது! - பாஸ் தகவல் பிரிவுத் தலைவர்
- Shan Siva
- 13 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 13: நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பாக பிரதமர்
அன்வார் இப்ராஹிம் கடந்த சனிக்கிழமை அளித்த விளக்கம், பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்பியதாக பாஸ் கட்சியின்
தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறினார்.
முன்னாள் பிரதமர்
நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யும் வரை ஏன் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பது
உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டாக்டர் மகாதீர்
முகமட்டின் நிர்வாகத்தின் போது நஜிப் கைது செய்யப்பட்டார். முகைதீன் யாசின்
பிரதமராக இருந்தபோது வழக்குத் தொடரப்பட்டது. இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
புத்ராஜெயாவுக்குத் தலைமை தாங்கியபோது தண்டிக்கப்பட்டார் என்று அன்வார் கூறிய விளக்கத்தையும்
பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மறுத்தார்.
ஆனால், உண்மை என்னவென்றால், அந்த நேரத்தில் பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கம்-குறிப்பாக டிஏபி மற்றும் பிகேஆர் தலைவர்கள் பாரிசான் நேஷனல் (பிஎன்) அரசாங்கத்தை வீழ்த்துவதில் வெற்றிபெறும் வரை, நஜிப் மீது வழக்குத் தொடுப்பதையே முக்கிய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருந்தனர் என்று ஃபாத்லி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *