அரண்மனையிலிருந்து எந்த அறிவிப்பையும் பெறவில்லை! - பிரதமர் துறை

- Shan Siva
- 10 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 10: முன்னாள் பிரதமர்
நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க
அனுமதிக்கும் எந்தவொரு கூடுதல் அறிவிப்பையும் இஸ்தானா நெகாராவிடமிருந்து பெறவில்லை
என்று பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவின் கீழ் உள்ள எங்கள் அதிகாரப்பூர்வ
கோப்புகள் அல்லது பதிவுகளில் கூடுதல் ஆவணம் அல்லது இணைப்பு எதுவும் இல்லை என்பதை
நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *