கும்பாபிஷேகத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பிடிபட்டனர்! செந்தூல் போலீசார் அதிரடி

top-news

(‌இரா.கோபி)

கோலாலம்பூர்‌, பிப்‌ 17: இம்மாதம்‌ 3ஆம்‌ தேதி செந்தூல்‌ அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம்‌ நடைபெற்ற வேளையில், கூட்ட நெரிசலைச் சாதகமாக்கி, தங்கச் சங்கிலி, பணப்பையைக் களவாடி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசயைக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக 17 புகார்களைப்‌ பெற்ற செந்தூல் போலீஸார்‌ கொள்ளையர்களைத்‌ தேடும்‌நடவடிக்கையில்‌ தீவிரமாக இறங்கினர்.

இதனை அடுத்து செந்தூல்‌ வட்டாரத்தில்‌ உள்ள ஒரு தங்கும் விடுதியில் ‌போலீஸார்‌ சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் ஐவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் 7 நாட்கள்‌ தடுப்புக்காவலில்‌ வைத்து விசாரணை  முடிந்த பிறகு நேற்று காலை அந்த ஐவரும்‌ கோலாலம்பூர்  நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *