உள்ளூர் அரிசி விநியோகம் - அரசு தீர்வு கண்டு வருகிறது! - அமைச்சர் மாட் சாபு

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜன 25: உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகம் மற்றும் நெல் கொள்முதல் விலைகள் தொடர்பான பிரச்சினையில் அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒரு விரிவான தீர்மானத்தை அறிவிக்கப்படுவதற்கு முன்பு முழுமையான ஈடுபாட்டிற்கு அதிக நேரம் தேவை என்று அவர் கூறினார்.

தங்களைப் பொறுத்தவரை, நுகர்வோர், விவசாயிகள், ஆலைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான வாழ்க்கைச் செலவுக்கான தேசிய நடவடிக்கை கவுன்சிலுடனும் (NACCOL) விவாதிக்கப்படும் என்றும்,  மேலும் அவரது ஒப்புதலுடன், தேவையான மாற்றங்களைச் செயல்படுத்துவோம் என்றும் அவர் இன்று அமனா தேசிய மாநாடு 2024 ஐ நிறைவேற்றிய பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *