சபாவின் கோத்தா மருடுவில் மிதமான நிலநடுக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா மருடு, பிப். 11-

சபாவின் கோத்தா மருடுவில், ரிக்டர் அளவைக் கருவியில் 3.8ஆகப் பதிவான மிதமான அளவிலான நிலநடுக்கம்.நேற்று திங்கள்கிழமை காலை 10.39 மணிக்கு ஏற்பட்டதாக, மலேசிய வானிலை ஆய்வு இலாகா (மெட்மலேசியா) தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்ததாக அது கூறியது.கோத்தா மருடுவிலிருந்து சுமார் 257 கிலோ மீட்டர் தொலைவில் அது ஏற்பட்டதாகவும் அதன்
அதிர்வு கோத்தா மருடுவில் உணரப்பட்டதாகவும் மெட்மலேசியா தெரிவித்தது.நிலைமையை தமது இலாகா தொடர்ந்து கண்காணித்து வரும் என்று அது கூறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *