காரில் 5 நாள் முன் இறந்த ஆடவரின் சடலம்! குளுகோரில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், மே 30: சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்ததாக நம்பப்படும் ஒரு ஆணின் சடலம் நேற்று குளுகோரில் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டது.

ஜாலான் சுங்கை துவா சாலையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, காலை சுமார் 11.45 மணியளவில் பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்ததாக திமூர் லாவுட் காவல் நிலையத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது கூறினார்.

ஓட்டுநர், ஆயர் ஈத்தாமைச்  சேர்ந்த 37 வயது ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரின் ஓட்டுநர் இருக்கையில், அவர் நேர்த்தியாக உடையணிந்து சாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சடலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எந்தவிதமான குற்றச் செயலுக்கான தடயங்களும் கண்டறியப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *