நாய்கள் கொலை! ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 3: ஒரு நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகளைக் கொன்றதற்கு நீதி கோரி, சுங்கை பூலோவில் உள்ள பள்ளிக்கு வெளியே சுமார் 50 போராட்டக்காரர்கள் இன்று கூடினர்.

"கொலைகளை நிறுத்து" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய அவர்கள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, மரணத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் பள்ளி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்தனர்.

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட நாய்களின் மரணம் குறித்து, விலங்கு ஆர்வலர் சித்தி ஃபவுசியா டிக்டோக்கில் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *