நோ ஒமாரும் ராய்ஸ் யாத்திம் மகனும் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர்களாக நியமனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், . 20 -

சிலாங்கூர் மாநில அம்னோவின் முன்னாள் தலைவர் நோ ஒமாரும் முன்னாள் மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமின் மகன் டேனி ராய்ஸும் பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் முதலாவது தலைமைத்துவக் கூட்டத்தில் முடிவு செய்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் முஹிடின் யாசினினால் இவர்கள் இருவரும் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக,
அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்தார்.

இவர்களைத் தவிர்த்து, ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் ஹெரிசன் ஹசான், சரவாக் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் ஜஸிரி அல்காஃப் அப்டில்லா மற்றும் பெர்த்தாம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் காலிக் மேஹ்தாப் இஷாக் ஆகியோரையும் முஹிடின் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர்களாக நியமித்திருக்கின்றார்.

இவர்களிடம் காணப்படும் இளமை, அனுபவம் மற்றும் சிறந்த தலைமைத்துவம் ஆகியவை கட்சியை வலுப்படுத்த உதவும் என்று அஸ்மின் தெரிவித்தார்.கட்சியின் முதலாவது கூட்டத்தில் சபா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக, பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளருமான அஸ்மின் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *