ஜொகூர் பாரு மாநகராட்சி நகர பாதுகாப்புத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது!

- Muthu Kumar
- 31 Dec, 2024
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, டிச.31
ஜொகூர் பாரு மாநகராட்சியை ஒரு நிலைத்தன்மையுள்ள, அனைத்தையும் உள்ளடக்கிய, மற்றும் உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை 2025ஆம் ஆண்டுக்காக முன்னெடுத்துள்ளது. இது குறித்து ஜொகூர் பாரு மாநகராட்சி கழகத்தின் டத்தோ பண்டார், டத்தோ ஹாஜி முகமட் நோராசம் டத்தோ ஹாஜி ஒஸ்மான் நேற்று நடந்த கழகத்தின் முழு கூட்டத்தில் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் வெ.570 மில்லியனாகும். இதில் வருவாய் மேலாண்மை மற்றும் மக்கள் நலன் கருதி புனரமைப்புத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்பணிக்குழு போக்குவரத்து நெரிசல், நகர சுத்தம் மற்றும் சமூக நலத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதை டத்தோ பண்டார் குறிப்பிட்டார்.
மாநகராட்சியின் முக்கிய சாதனைகளில் ஒன்று நாய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம் (Program Kembiri) . இதன் மூலம் இதுவரை 200க்கு மேற்பட்ட தெருநாய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது பெரும் வெற்றி எனக் கருதப்படுகிறது. மேலும்,
ரேபிஸ் போன்ற நோய்களை தடுக்கும் நோக்கில், மாநகராட்சி, தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஊக்குவிக்கிறது என்றார்.
கல்வித் துறையிலும், ஜொகூர் பாரு மாநகராட்சி ஆன்லைன் லைசன்ஸ் புதுப்பிப்பு மற்றும் e-Merit எனப்படும் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் பணிகள் எளிதாகவும் வேகமாகவும் செயல்படுகின்றன எனக் கூறினார். 240 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இப்ராஹிம் அனைத்துலக வணிக மாவட்டம் (IIBD) ஜொகூர் பாருவுக்கு புதிய அடையாளமாக இருக்கும். 2025 ஜனவரி 1 முதல் 80888' எனும் பிரத்யேக மின்னஞ்சல் குறியீடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் ஜொகூரின் முக்கிய பொருளாதார மையமாக இந்த பகுதியில் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மாநகராட்சி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், 2027ஆம் ஆண்டு செயல்பட உள்ள வேகமார்க்க போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டத்தை முக்கியமாக முன்னேற்ற உள்ளது என்றார்..
2024ஆம் ஆண்டு முழுவதும் மாநகராட்சி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இதில் புவியியல் புதுமை விருது மற்றும் சிறந்த உள்ளூர் அதிகார சபை நகர விருது குறிப்பிடத்தக்கது. இதோடு, சீனா, ஜப்பான், மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் பிரதிநிதிகளுடன் நல்ல உறவுகளை உருவாக்கியது எனக் கூட்டத்தில் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டை வரவேற்கும் நகராட்சி, அனைத்து தரப்பினரும் மாநகரின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோருகிறது. அரசு, தனியார் துறை மற்றும் மக்களிடையேயான ஒத்துழைப்பு, ஜொகூர் பாருவை உலகத்தரமுள்ள நகரமாக மாற்றுவது குறித்து முக்கியமானது. "2025ஆம் ஆண்டு, நம்மைச் சுற்றியுள்ள சூழலையும், மக்களின் நலனையும் மேம்படுத்தும் சந்தர்ப்பமாகும்,' என்று அவர் கூறினார்.
மேலும் 2025 ஜனவரி 1 முதல் ஜொகூரில் வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மாற்றப்பட்டு, சனி மற்றும் ஞாயிறு விடுமுறையாக இருக்கும். இந்த மாற்றம் மக்களின் வாழ்க்கைத்திறன் மற்றும் தொழில்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்த மாற்றம் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும், நகராட்சி சேவைகள் மேம்பாட்டிலும் சாதகமான தாக்கம் உண்டாக்கும் என குறிப்பிட்டார். இதனிடையே ஜொகூர் மக்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வெற்றியும் நலனும் கொண்டுவரட்டும் என வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *