ஜொகூர் வெள்ளம் - வெள்ள நிவாரண மையங்களில் 4000 பேர்

- Shan Siva
- 13 Jan, 2025
ஜொகூர் பாரு, ஜன 13: ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மாநிலம் முழுவதும் வெள்ள நிவாரண மையங்களில் சுமார் 4,000 பேர் தங்கியுள்ளனர்.
ஜொகூர் பேரிடர்
மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, இன்று காலை 9 மணி
நிலவரப்படி, மாநிலத்தில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,973 ஆக இருந்தது.
மாநிலம்
முழுவதும் செயல்படும் மொத்தம் 38 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஜொகூரில் உள்ள
பத்து மாவட்டங்களிலும், வெள்ளத்தால்
பாதிக்கப்படாத மாவட்டங்கள் உட்பட இருண்ட வானிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *