ஜொகூர் அரசு பத்து பூத்தே இறையாண்மை விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு!

- Muthu Kumar
- 07 Jan, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, ஜன.7-
ஜொகூர் மந்திரி பெசார், டத்தோ' ஒன் ஹஃபிஸ் காஸி, பத்து பூத்தே, பந்துவான் தெங்ஙா மற்றும் துபிர் செலாத்தான் ஆகிய இடங்களின் இறையாண்மை விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். 2025 ஜனவரி 4 அன்று வெளியிட்ட அறிவிப்பில், 2025 ஜனவரி 3 அன்று நடைபெற்ற பத்து பூத்தே கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுவின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இது, 2024 டிசம்பர் 5 அன்று வெளியிடப்பட்ட இராஜ விசாரணை ஆணைய (RC) அறிக்கையுடன் தொடர்புடையது. அதில் இந்த இறையாண்மை விவகாரம் தொடர்பான தகவல்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன என ஜொகூர் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார். அந்த அறிக்கையில், 2018 23 அன்று மலேசியாவின் இறையாண்மை மீதான வாதங்களை ஆதரிக்கும் புதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், பத்து பூத்தே தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் (IC.J) முடிவை மீண்டும் பரிசீலிக்க மற்றும் விளக்க கோரிய கோரிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற்றது குறிப்பிடப்பட்டுள்ளது.
2008-ல் சிங்கப்பூர் ஆதரவாக வந்த தீர்ப்புக்குப் புதிய ஆதாரங்கள் எதிர்ப்பு வைப்பதற்காக இந்நடவடிக்கை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டது என்றார்.அறிக்கையின் முக்கிய அம்சங்களில், பத்து பூத்தே உள்ளிட்ட சிங்கப்பூர் நீரிணைகளில் உள்ள தீவுகள் 17ஆம் நூற்றாண்டு முதல் ஜொகூர் சுல்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன என்று ICJ நீதிபதிகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த உரிமை 1824 இல் அங்க்லோ- நெதர்லாந்து ஒப்பந்தம் மற்றும் க்ராஃபோர்டு ஒப்பந்தம் மூலம் நிலைத்திருந்தது.
1950-60களில் வெளியான பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களும் பத்து பூத்தே ஜொகூர் நீர்ப்பரப்பில் உள்ளதாகவே அங்கீகரித்தன எனத் தெரிவித்தார்.மந்திரி பெசார் இந்த கோரிக்கையை திரும்பப்பெற்றது மிகப் பெரிய குற்றமாகும் என்று கூறினார். இது அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டது. இந்த முடிவால், ஜொகூர் சுல்தானத்தின் முன்னாள் காலனித்துவ பகுதியை மீட்டெடுக்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது. இதனால் பத்து பூத்தே மீதான அனைத்து உரிமைகளும் இப்போது நிரந்தரமாக இழக்கப்பட்டுள்ளன என்றார்.
ஜொகூர் அரசு மற்றும் மக்கள் இதனை மிகுந்த வருத்தத்துடன் காண்கின்றனர். இந்தத் தவறில் தொடர்புடையவர்களை தேசிய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்று மந்திரி பெசார் வலியுறுத்தினார். ஜொகூர் மாநிலத்தின் சமாதானத்தையும் இறையாண்மையையும் பாதிக்கும் எந்த செயலையும் அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று உறுதியளித்தார்.இறுதியாக, இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *