ஜொகூரில் பட்டதாரிகளுக்கு RM4,000க்கு மேல் சம்பளம் – மந்திரி பெசார் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: ஜொகூரின் புதிய பட்டதாரிகள் தற்போது RM4,000 மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெற முடியும் என்று ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
இதனால் வேலை தேடி சிங்கப்பூருக்கு இடம்பெயர வேண்டிய அவசியம் குறையும் எனவும் அவர் கூறினார்.
தொழில்நுட்ப மற்றும் தொழில்பயிற்சி (TVET) பட்டதாரிகள் தகுதி அடிப்படையில் RM4,000 முதல் RM5,000 அல்லது அதற்கு மேல் சம்பளம் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உயர்ந்த சம்பள வாய்ப்புகள் அனைத்தும் ஜொகூர்–சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) வளர்ச்சியின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் ஒரு முன்னணி அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் RM2 பில்லியன் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வளர்ச்சியை பயனுள்ளதாக மாற்ற, ஜொகூர் மாநில அரசு Johor Talent Development Council (JTDC) மூலம் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு இணைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் PERKESO, TVET நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழில்பயிற்சி மையங்கள் மற்றும் HRD Corp ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மட்டும் JTDC மூலம் 7,773 வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *