ஜொகூர் சிறப்பு பொருளாதார மண்டல ஒப்பந்தம்! மலேசியா, சிங்கப்பூர் கூட்டாக அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 7: மலேசியாவும் சிங்கப்பூரும் செவ்வாய்க்கிழமை ஜொகூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பான ஒப்பந்தத்தை அறிவித்தன. முதலீட்டை ஆதரிப்பது மற்றும் நாடுகளுக்கு இடையே பொருட்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வர இலகுவான முறை ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு பொருளாதார மண்டலத்தை கூட்டாக அபிவிருத்தி செய்ய இரு நாடுகளும் முதலில் கொள்கையளவில் ஒப்புக்கொண்டன.  

இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சரவை உறுப்பினர்களின் இன்றைய மலேசியப் பயணத்தில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

 உற்பத்தி மற்றும் தளவாடங்கள் முதல் சுற்றுலா மற்றும் எரிசக்தி மாற்றம் வரையிலான துறைகளில் அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதை இரு நாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளன என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளில் 50 திட்டங்களையும், 20,000 திறமையான வேலைகளை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளன.

மலேசியா ஒரு உள்கட்டமைப்பு நிதியை நிறுவி நிர்வகிக்கும், அங்கு நிறுவ விரும்பும் நிறுவனங்களை ஆதரிக்கும் அதே வேளையில், சிங்கப்பூர் தனது சொந்த நிதியை உருவாக்கி முதலீடுகளை எளிதாக்கும் மற்றும் ஜொகூரில் செயல்படும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் என்று ரஃபிஸி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *