ஜொகூர் மாநில அரசு 8,000க்கும் மேற்பட்ட மலிவு விலை வீடுகளை கட்டத் திட்டம்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

கூலாய், பிப். 5-

ஜொகூர் மாநிலத்தின் குடியிருப்பு மற்றும் உள்ளூர் நிர்வாகத் துறை தலைவர் டத்தோ முகமட் ஜாஃப்னி முகமட் ஷீகோர் இதனைப் பட்டியலிடும்போது, 2022 முதல் கடந்த வருடம் 31 டிசம்பருக்குள் 13,461 மலிவு விலை வீடுகள் அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.அடுத்த ஆண்டில் மேலும் 8,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் ஜொகூர் குறைந்த செலவில் மலிவான வீடுகளின் கட்டமைப்பில் ஒரு முக்கியமான வரலாறு படைத்துள்ளதாக அவர் கூறினார். ஏனெனில் இது ஓர் ஆண்டு காலத்தில் முடிக்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் ஆகும்.இந்த திட்டங்கள் மூலம், 2022 முதல் 2026 ஆம் ஆண்டுக்குள் 30.000 மலிவு விலை வீடுகளை கட்டி முடித்து, குடியிருப்பாளர்களுக்கு ஒப்படைக்கும் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளதாக பத்திரிகையாளர் செய்தியில் தெரிவித்தார்.

கூலாயில் நடந்த மீண்டும் பள்ளிக்கு போகலாம் எனும் நிகழ்ச்சியில் 950 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் யாயாசான் செஜாரா கூலாயின் மூலமாக பணப்பரிசு மற்றும் பள்ளி பொருட்களை வழங்கிய பின் இதனை பகிர்ந்து கொண்டார்.இந்த 8,000 மலிவு விலை வீடுகள் ஜொகூர்/மாநிலத்தின் அனைத்து 10 மாவட்டங்களிலும் உருவாக்கப்படுவதாகவும், அதில் பாதி அளவு ஜொகூர் பாரு. இஸ்கண்டார் புத்ரி மற்றும் பாசீர் கூடாங் பகுதிகளில் கட்டப்படுவதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டில், 2,000 ஜொகூர் மலிவு விலை வீடுகள் இஸ்கண்டார் புத்ரி, மெர்சிங், குளுவாங் மற்றும் சிம்பாங் ரெங்கம் பகுதிகளில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற 6,000 வீடுகள் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.மேலும், மாநில அரசு எப்போதும் பங்கு பெறும் பல திட்டங்களை விரைவாக
முடிக்க முயற்சி செய்துவருவதாகவும், பல்வேறு பிரச்சினைகளை சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் கூறியதாவது, ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார பகுதி அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம், மாநிலத்தில் விற்பனை செய்யப்படாத சொத்துகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.2022 இல் உள்ள தரவுகளின்படி, ஜொகூரில் விற்பனை செய்யப்படாத சொத்துகளின் 90விழுக்காடு விலை 500,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் மேலானவை ஆகும். மீதமுள்ளவை ஒன்று மற்றும் இரண்டு மாடி வீடுகளும், ஸ்டிராடா மற்றும் பங்களோ பிரிவுகளும் ஆகும்.

எனினும், 2022 முதல் 2024 வரை,ஜொகூரில் மொத்த சொத்துகளின் விற்பனை 15 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.மாநில அரசு எப்போதும் நில மேம்பாட்டாளர்கள் ஆடம்பர இல்லங்களை கட்டமைக்கும்போது, பொது இல்லங்களை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீடுகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *