மனநலன் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய ஐவர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Jan, 2025
ஜனவரி 20,
திரங்கானுவில் உள்ள kemaman பொதுச் சந்தையில் மனநலன் பாதிக்கப்பட்ட ஆடவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த வணிகர்கள் உட்பட பலராலும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனநலன் பாதிக்கப்பட்டவரைத் தாக்கியவர்களில் ஐந்த ஆடவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக் கிழமை ஆடவர் ஒருவரைப் பொதுமக்கள் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியது. சம்மந்தப்பட்டவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் உள்ள வணிகக் கடையில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 5 உணவுக் கடைகள் சேதத்துக்குள்ளானதால் விபத்தை ஏற்படுத்திய ஆடவரை வணிகக் கடையினரும் பொதுமக்களும் சரமாரியாகத் தக்கியுள்ளனர்.
தாம் ஒரு OKU என்றும், கட்டுப்பாட்டை இழந்ததால் கடையில் மோதியதாக 47 வயது முதியவர் மன்றாடியும் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பானக் காணொலிகள் சமூகவலைத்தளத்தில் பரவியதும் காணொலியில் உள்ள சிலரைக் கெமாமான் மாவட்டக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 18 முதல் 60 வயதுடைய ஐவரையும் அடுத்த 3 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படியும் காணொலியில் உள்ள மற்றவர்களையும் கைது செய்யும்படியும் Majistret நீதிபதி Sharifah Amirda Shasha உத்தரவிட்டுள்ளார்.
Seorang suspek direman tiga hari berhubung kes pukul lelaki OKU yang bernama Ahmad Nor Al Faizan Jusoh di Pasar Tani Chukai. Lima individu ditahan dan mangsa kini dirawat di hospital. Kejadian tular di media sosial menarik perhatian orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *