இந்திய மாதுவுடம் தங்கச் சங்கிலி பறிப்பு!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தெலுக் இந்தான், ஜன.31-

தெலுக் இந்தான், ஜாலான் சுல்தான் அப்துல்லாவில் அமைந்துள்ள ஹூவர் பார்க் என்னும் வீடமைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் 65 வயது மாது கடந்த 28.01.2025 அன்று காலை 7.06 மணிக்கு வழக்கம் போல் பூத்தொடுப்பதில் ஈடுபட்டுள்ளார். கருமை நிற தடித்த உருவம் கொண்ட அந்த இந்திய சந்தேகநபர், பாதிக்கப்பட்ட அந்த மாதுவிடம் மலர் மாலை வேண்டும் என்று கேட்டுள்ளார். அது உண்மை என்று மூதாட்டியும் நம்பியுள்ளார்.

சாலை போக்குவரத்து உரிமம் இல்லாத ஹோண்டா வாவே ரக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் திடீரென்று பாதிக்கப்பட்ட மாதுவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பாதி அறுத்த நிலையில், அந்த சந்தேக நபரோடு பாதிக்கப்பட்டவர் சங்கலியை விடாமல் போராடியபோது மறுபாதி சங்கிலி மாதுவின் கையில் இருக்க, திருடன் திருடன் என்றும் காப்பாற்றுங்கள் என்றும் அலறிய சத்தம் கேட்டு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்டவரின் மகன் விழித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த போது சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் என்றும் கீழ்ப்பேரா மாவட்ட போலீஸ் தலைவர் அகமது அட்னான் பஸ்ரி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில், அவர் மேலும் கூறுகையில், நடந்த இத்திருட்டுச் சம்பவத்தின் போது அந்த முதியவர்க்கு கழுத்து, கைகள், இடுப்புப்பகுதிகளில் காயத்திற்கு உள்ளாகியுள்ளதகவும் அந்த மாது போலீஸ் புகார் அளித்துள்ளார் என்றும் ஓசிபிடி அட்னான் குறிப்பிட்டார்.

கொள்ளையிட்டது. கொள்ளையின் போது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் என்ற குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் இது விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படும் என்றார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர் குறித்து காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவு சேர்ந்த இன்ஸ்பெக்டர் முஸ்லிபாஹ் அஸ்மியின் கைப்பேசி 011.21858926 அல்லது 05-6292222 அலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *