இராணுவ வீரர் மரணம்! எந்த சமரசமும் இருக்காது! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

ஜெலேபு, ஏப் 12: இராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில் குற்றச்சாட்டு இருப்பின் அரசு எந்தவித சமரசமும் செய்யாது என துணைப் பிரதமர் Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், கார்ப்பரல் ஒருவரால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் ராணுவ வீரர் 24 வயது முகம்மது அமிருல் ராஸிக் ரோசாபிந்தி  உயிரிழந்த சம்பவத்தை அரசு மிகக் கவனமாக எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

உடல் வன்முறையை உள்ளடக்கிய ஒழுக்க நடவடிக்கைகள் எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாது. அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை (SOP) கடைப்பிடிக்க வேண்டும்; விதிமுறைகளுக்கு வெளியான செயல்கள் ஏற்கப்படாது என்று அவர் கூறினார். ஜெலேபு நாடாளுமன்றத் தொகுதி ஹரிராயா திறந்த இல்ல நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமிருல் கடுமையான காயங்களால் கோமா நிலையில் Sultan Haji Ahmad Shah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 30-ஆம் தேதி, பெந்தோங்,  Royal Malay Regiment-இன் 25வது படைத்தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவமே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில், கடமையின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் 37 வயதான இளைய நிர்வாக அதிகாரி  வன்முறையைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *