நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்தே நடத்துங்கள்! - பாஸ் அறிவிப்பு
- Shan Siva
- 02 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 2: ஜொகூர் தேர்தலுடன் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக, நாடாளுமன்றம் மற்றும் பிற மாநில சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டும் என பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மலாக்கா, நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் தேர்தல்கள் ஜொகூர் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும், இதன் மூலம் நேரத்தையும் வளங்களையும் சேமிக்க முடியும் என்று பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
பொதுத் தேர்தலும் அதே நேரத்தில் நடத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜொகூர் தேர்தல் குறித்து விவாதிக்க பாஸ் கட்சி ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டும் என்றும், பெரிகாத்தான் நேஷனலும் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் துவான் இப்ராஹிம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



