ஆதரவற்றோர் இல்லத்தில் போலீஸாரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD

செர்டாங், டிச 23: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செர்டாங்‌ மாவட்ட போலீஸார் ஏற்பாட்டில், பூச்சோங்‌ கின்றாரா தாமான்‌ கந்தானில்‌ உள்ள விக்டோரியா ஆதரவற்றோர் இல்லத்தில்‌ கிறிஸ்துமஸ்‌ கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும்‌ நம்‌ நாட்டில்‌ நடக்கின்ற பெருநாள்களை ஒவ்வோரு ஆதரவற்றோர் இல்லங்களில்‌ நடத்தி வருவதாகவும், காரணம் அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்‌ என்றும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த செர்டாங்‌ மாவட்ட போலீஸ்‌ தலைவர்‌  ஏசிபி ஏ. அன்பழகன்‌ தெரிவித்தார்.

‌இந்நிகழ்வில் 70-க்கும்‌  மேற்பட்ட பெரியவர்கள்‌, 14 சிறுவர்களுக்குத் தேவையான பொருட்கள்‌, பரிசுப் பொட்டலங்கள் மற்றும்‌ மதிய உணவும்‌ வழங்கியதாக அவர்‌ தெரிவித்தார்‌..

ஒவ்வொரு ஆதரவற்றோர்  இல்லத்திலும்‌ மூவின மக்களும்‌ இருக்கின்றனர். அவர்களுக்கு பல உதவிகள்‌ செய்து வருவதாக் கூறீய அவர்,  கிறிஸ்துமஸ்‌ என்று  இல்லாமல்‌ ஹரிராயா, தீபாவளி, சீனப்புத்தாண்டு போன்ற  பெருநாள்‌ காலங்களில்‌ ஆதவற்றோர் இல்லங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதாக  தெரிவித்தார்‌. 

இந்த நிகழ்ச்சிக்கு பக்க பலமாக தச்சின்‌ லயிவ்‌  கிளாப்‌ பல உதவிகளை  செய்து வருவதாகவும், அவர்களுக்கு இந்த வேளையில்‌ நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *