நீரில் மூழ்கி போலீஸ்காரர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, டிச 23: ஈப்போ, கம்போங் காஜா அருகே உள்ள ஜாலான் உத்தாமா சங்காட் லாடா என்ற இடத்தில் உள்ள  கால்வாயில் நேற்று நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட போலீஸ்காரர் ஒருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

முஹம்மது தௌஃபிக் சயுதி என்ற அந்நபரின் உடல் இன்று அதிகாலை 4.55 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் ஓர் அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்ட 39 வயதான அந்நபர் Melaka Tengah மாவட்டத் தலைமையகத்தில் ஒரு போலீஸ் கார்ப்ரல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *