போதை பொருள் குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகருக்கு கிருஷ்ணாவுக்கு போலீஸ் நோட்டீஸ்!

top-news
FREE WEBSITE AD

போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்தான் போதை பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட நிலையில் அதனை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் அதனை தனக்கு பயன்படுத்த கற்றுக் கொடுத்தது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் தான் என்று கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே நுங்கம்பாக்கம் பப்பில் தகராறு செய்தது மற்றும் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் பிரசாந்த் போதை பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோருக்கு சப்ளை செய்ததாக கூறியுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர் தமிழில் கழுகு, மாரி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அடுத்தடுத்து தமிழ் பிரபலங்கள் சிக்குவது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *