சரியான காரணமின்றி போலிஸ் அதிகாரிகள் தனிநபரின் போனை ஆய்வு செய்ய முடியாது! - உள்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 19: சரியான காரணமின்றி  தனி நபரின் கைபேசியை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியாது என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அமலாக்க அதிகாரிகள் சட்டத்தின் எல்லைக்குள் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒரு நபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை அறிவுறுத்துவது போன்ற தெளிவான அடிப்படையை காவல்துறை வைத்திருந்தால்,  அத்தகைய சோதனைகளை மேற்கொள்ளலாம் என அவர் கூறினார்.

எந்தவொரு காவல்துறை அதிகாரியும் சரியான காரணமின்றி தங்கள் கைத்தொலைபேசியை  சோதித்ததாக உணர்ந்தால், பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிக்குமாறு சைபுதீன் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *