பூட்டிய குளியலறையில் பிணமாகக் கிடந்த பெண்! - பத்து காஜாவில் பரபரப்பு

- Shan Siva
- 15 Feb, 2025
ஈப்போ, பிப் 15: பத்து காஜாவில் உள்ள ஒரு வீட்டில் பூட்டிய
குளியலறையில் 44 வயது பெண்
ஒருவர் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் இன்று காலை 9.33 மணிக்கு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின்
கணவரிடமிருந்து கதவைத் திறக்க உதவி கோரி தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாக பேராக்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
அங்கு வந்தவுடன்,
சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அமைச்சகத்தின்
மருத்துவ பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின்
மரணத்தை உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று
ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *