நிலச்சரிவு பகுதியில் பிரசவ வலியில் துடித்த பெண்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 28: சபா, கோத்த கினாபாலு அருகே ரானாவ்-தம்புனான் வழித்தடத்தில்  நிகழ்ந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை இடம் மாற்றுவதற்கு சுகாதாரக் குழு, பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் முயற்சியை மேற்கொண்டனர்.

இந்த கூட்டு முயற்சியில் தம்புனான் மருத்துவமனையின் ரீட்ரீவர் குழு, காவல்துறை, பொதுப்பணித் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்பெண்ணை பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில்  துரிதமாகச் செயலாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியாவானில் உள்ள  Klinik Desa Tontolob  சுகாதாரக் குழுவின் ஆரம்ப பரிசோதனையில், அப்பெண்   அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பாட்டதை அடுத்து,

தம்புனனில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கெனிங்காவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அப்பெண்ணின் சூழலைப் புரிந்து கொண்டுஅவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது தாயும் குழந்தையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *