மாமியாரைக் கொலை செய்த மருமகன்! - நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, பி 12: இந்த மாத தொடக்கத்தில் ஜொகூரில் உள்ள தாமான் ஸ்ரீ ஸ்கூடாயில் தனது மாமியாரைக் கொலை செய்ததாக 51 வயது நபர் மீது ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி அதிபா ஹசிமா வஹாப் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு ஜுரைடி ஜகாரியா குற்றத்தை ஒப்புக்கொண்டார., ஆனால் கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் கீழ் வருவதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

 பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு தாமான் ஸ்ரீ ஸ்கூடாயில் உள்ள ஜாலான் தெம்பாகா மேராவில் உள்ள ஒரு வீட்டில் 79 வயதான தனது மாமியாரான எபா டெய்க்கைக் கொன்றதாக ஜுரைடி மீது குற்றம் சாட்டப்பட்டதாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது,. தண்டனை விதிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *