முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் மானியம் கோரலாம்!

top-news
FREE WEBSITE AD

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் மானியம் கோரலாம்-அய்மான் ஆதிரா சாபு!



கோலாலம்பூர், நவ. 29-

அரசாங்க மானியத்தை ஏற்கெனவே பெற்றுவரும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியுதவி கோரி ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை துணையமைச்சர் அய்மான் ஆதிரா சாபு நேற்று விளக்கினார்.

தற்போது அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்றுவரும் வழிபாட்டுத் தலங்கள் மூன்றாண்டுகளுக்குப் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் கூறப்பட்டது. அந்த அறிவிப்பு பற்றி விளக்கமளித்த அய்மான், இச்சட்டம் ஏற்கெனவே நடப்பில் உள்ளது என்று விவரித்தார்.ஆயினும், அத்தகைய வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் அரசாங்க நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றார்.

நிதிவளத்தைப் பொறுத்து அந்த விண்ணப்பங்களுக்கு தமது அமைச்சு ஒப்புதல் அளிக்கும். இந்த வழிமுறைகள் தெளிவாக இருப்பதை உறுதிசெய்ய முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் விண்ணப்பம் மீதான வழிகாட்டிகளை நாங்கள் மறுஆய்வு செய்துவருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றபோதிலும் பணக் கையிருப்பைப் பொறுத்தே அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அய்மான் சொன்னார்.

அடுத்தாண்டில் ஒவ்வோர் வழிபாட்டுத் தலத்திற்கும் அதிகப்பட்சம் இரண்டரை லட்சம் வெள்ளி வழங்கப்படும். இத்தகைய 200 விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சு எதிர்பார்க்கிறது. நாடு தழுவிய வகையில் அந்த வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக மத்திய அரசாங்கம் ஐந்து கோடி வெள்ளியை ஒதுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *