முன்னாள் தலைமையாசிரியர் விஜயலட்சுமிக்கு வாழ்த்து - பாராட்டு விழா!

- Muthu Kumar
- 04 Jan, 2025
கோகி கருணாநிதி
ஜொகூர் பாரு, ஜன.4-
ஜொகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம், பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் விஜயலட்சுமி இராமலிங்கத்திற்கு அவரது பிறந்த நாளில் சிறப்பு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.விஜயலட்சுமி தனது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடிய நிலையில், அவரின் கணவர் சு. சீனிவாசகம், பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் அவரை கௌரவித்தார்.
விழாவை சிறப்பித்த இயக்கத்தின் தலைவர் கா. நடராஜா, விஜயலட்சுமியின் கல்வி மற்றும் தமிழ்ச்சேவையை வணங்கினார். அவர் மாடோஸ், உலுதிராம், டேசா செமர்லாங் ஆகிய தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியராகவும், மெர்சிங் மற்றும் பெலெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் பல பரிசுத்தமான பணிகளை மேற்கொண்டதை குறிப்பிடுகிறார்.
பாராட்டு நிகழ்வில் முன்னாள் விரிவுரையாளர் இராம சேதுபதி நினைவுப்பரிசை வழங்கி சிறப்பித்தார். இதோடு, துன் அமீனா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் தமிழ்முத்து கே. பூபாலன், பொதுநல விரும்பி ஜெயகணேசு மற்றும் முனைவர் சுரவியரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், விஜயலட்சுமி தம்போய் வட்டாரத் தமிழர் ஐக்கியச் சங்கத்தின் தலைவராக தனது சேவையை தொடர்வதை அனைவரும் பாராட்டினார்கள். அவரும் அவரின் கணவர் சீனிவாசகமும் பல்லாண்டு வாழ அனைவரும் வாழ்த்துக்களை அள்ளி வழங்கினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *