பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்காதீர்-பள்ளிகளுக்கு ஃபட்லினா எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன. 3

மாணவர்கள் மத்தியில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க வேண்டாம் என்று. பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். அனைத்து பகடிவதைச் சம்பவங்களையும் கல்வி அமைச்சு மிகக் கடுமையானதாக பார்ப்பதாகவும் கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்டிருக்கும் வழிகாட்டிகளுக்கு ஏற்ப புகார்கள் அவசியம் முறையாக கையாளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அடுவான் பூலி போர்டல்" (பகடிவதைப் புகார் இணைய தளம்) மூலம் நேரடியாக புகார் செய்யுமாறு. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெற்றோர்களை கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது என்று புத்ராஜெயாவில் நேற்று வியாழக்கிழமை நடந்த 2014ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது ஃபட்லினா தெரிவித்தார்.

"இணைய தளம் மூலம் நேரடியாக புகார்கள் செய்யப்பட்டால், அதன் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தெளிவானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளையில், நடப்பில் இருக்கும் வழிகாட்டிகள் அடிப்படையில், பள்ளிகளும் அவசியம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மேல் விசாரணைக்காக அச்சம்பவங்களை அவை அமைச்சுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதைத் தவிர்த்து, தங்கள் பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று பெற்றோர்கள் கருதினால், அதிகாரத் தரப்பினர் உட்பட உயர்மட்ட நிலையில், பகடிவதைச் சம்பவங்கள் குறித்து புகார் செய்ய பெற்றோர்களுக்கு உரிமை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உறைவிட பள்ளி (தங்கும் விடுதியுடைய பள்ளி) ஒன்றில், கமாண்டோ பாணியில் பகடிவதைச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அண்மையில் வெளியாகி இருந்த ஒரு புகார் குறித்து கருத்து கேட்டபோது ஃபட்லினா இவ்வாறு தெரிவிவித்தார்.சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த மூத்த மாணவர்கள், சுமார் இரண்டு மணி நேரமாக புதுமுக மாணவர்களை பகடிவதை செய்திருந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை செய்தி இணையத் தளம் ஒன்று அம்பலப்படுத்தி இருந்தது.

சம்பந்தப்பட்ட புதுமுக மாணவர்கள், தங்களின் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, கால்களை முட்டுக் கொடுத்து தலையை மட்டும் தரையில் வைக்கச் செய்யப்பட்டது (கமாண்டோ ரெஸ்ட்ஸ்) மற்றும் பொதுவில் ஆடைகளைக் களையச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது உட்பட இதர கடுமையான பகடிவதைகளை மூத்த மாணவர்கள் புரிந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட அப்பள்ளி, கல்வி அமைச்சின் கீழ் இல்லையென்றாலும், அவ்விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஃபட்லினா தெரிவித்தார்.இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியில், 6 ஜஹானாம்', '6 அஸாசில்' மற்றும் '7 மலாய்க்காட் மவுட்' ஆகிய பெயர்களில் குண்டர் கும்பல்கள் செயல்படுவதாக, அப்பள்ளியின் இரண்டு முன்னாள் மாணவர்கள் தெரிவித்ததாக, நியூ ஸ்டிரெட் டைய்ம்ஸ் செய்தி ஒன்று கூறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *