மூன்று மாநிலங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 17: இன்று முதல் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என  மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் மாநிலம் முழுவதும் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும், பகாங்கில்  ஜெரான்டுட், மாரான், குவாந்ந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும்  கணிக்கப்பட்டுள்ளதாக மெட் மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சபா, சரவாக் மற்றும் ஜொகூரின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் 19 வியாழக்கிழமை முதல் டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை வரை இது நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *