சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு நான்கு மாநிலங்களில் தொடர் மழை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 1: வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நான்கு மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என  மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் ஜொகூர் ஆகிய நான்கு மாநிலங்களில் தொடர்மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளந்தானில் தும்பட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனா மேரா, பாச்சோக், மாச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோல கிராய் பகுதிகளிலும், பஹாங்கில் ஜெரான்டுட், மரான், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பினிலும், ஜொகூரில்  மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய நகரங்களிலும், திரெங்கானுவில் மாநிலம் முழுவதிலும் தொடர் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *