ஏழு மாநிலங்களில் 11ஆம் தேதி வரை தொடர்மழை!

- Muthu Kumar
- 06 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 6-
தீபகற்ப மலேசியாவின் ஏழு மாநிலங்களில் டிசம்பர் 11ஆம் தேதி வரை அடைமழை பெய்யும் என்று மலேசிய வானிலைத்துறை (மெட்மலேசியா) நேற்று அறிவித்தது.பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோ சேனா, பாடாங் தெராப், பெண்டாங், சிக், பாலிங் ஆகிய மாவட்டங்களில் அடைமழை தொடர்ந்து கொண்டிருக்கும். பேராக்கின் உலு பேராக் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று அடை மழை ஆரம்பிக்கும்.
பகாங்கில் கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராந்துட், மாரான், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களில் அடைமழை தொடர்ந்து கொண்டிருக்கும். ஜொகூரின் மெர்சிங், கோத்தா திங்கி மாவட்டங்களில் திங்கள்கிழமையிலிருந்து அடைமழை தொடங்கும் என்று வானிலைத்துறை கூறியது.
தற்போதைய வானிலை நிலவரங்களால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்களை அது வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *