டிசம்பர் 16 வரையில் தொடர் மழை பெய்யும் மெட்மலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 10-

மலேசிய வானிலை ஆய்வு இலாகாவினால் (மெட்மலேசியா) கணிக்கப்பட்டிருக்கும், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, வரும் 16ஆம் தேதிவரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த பருவமழை, இக்காலகட்டம் முழுமையிலும் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு மற்றும் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக் கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடும் என்று, நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

"நாளை புதன்கிழமை முதல் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு மற்றும் வட மாநிலங்களில் கடுமையான மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அளவுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று, மெட்மலேசியா எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.வரும் வியாழக்கிழமை வரையில் தென் சீனக் கடலில் பலத்த காற்று வீசும் என்பதுடன் கடல் கொந்தளிக்கும் என்ற எச்சரிக்கையும் நிலவுகிறது.

“இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான சரியான தகவல்களை மெட்மலேசியாவின் www.met. gov.my, அவ்விலாகாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத் தளங்களில் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று மெட்மலேசியா கூறியது. நாளை புதன்கிழமை வரையில், திரெங்கானு மற்றும் பகாங்கின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் அளவுக்கு கடுமையான தொடர் மழை பெய்யும் என்று, இதற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இம்மாநிலங்களைத் தவிர்த்து,பெர்லிஸ், கிளந்தான், பேராக்,திரெங்கானு, பகாங் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில்,பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்றும் மெட்மலேசியா கூறியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *